தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் புழல் சிறையில் இருந்தவாறு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, செந்தில் பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.