மகனின் காதணி விழா – 108 கிடா வெட்டி விருந்து வைத்த சீமான்!!

0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக திகழ்பவர் தான் சீமான். இவர் தற்போது தனது குலதெய்வ கோவிலில் தனது மகனுக்கு காதணி விழா ஒன்றை நடத்தினார். அந்த விழாவில் அனைவருக்கும் சீமான் கிடா விருந்து வைத்துள்ளார்.

சீமான்:

சீமான் முதலில் சினிமா துறையில் இருந்து அரசியல் களத்தில் குதித்தார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் தற்போது நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் மிக மும்முரமாக வேலை செய்து வருகிறார். தற்போது இவர் தனது மகனுக்கு காதணி விழாவை நடத்தியுள்ளார். இந்த விழாவை அவரது குலதெய்வமான வீரகாளியம்மன் கோவிலில் வைத்து நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கோவில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள முடிக்கரை கிராமத்தில் உள்ளது. அப்போது அவர் கூறியதாவது, எனது மகனின் காதணி நிகழ்வுக்காக குலதெய்வ கோவிலுக்கு வந்தோம். இங்கு வந்து 108 கிடாவை வெட்டி விருந்து வைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி. மேலும் அரசு விவசாயிகளை கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெல் வாங்கி விற்பவன் பணக்காரனாகிறான் ஆனால் நெல் உற்பத்தி செய்பவன் கடனாளி ஆகிறான்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

உழவன் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் பண்ணும் நிலை ஏற்பட வேண்டும். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக செயல்படும். மத்திய அரசு செய்வது எல்லாம் ஓர் ஏமாற்று வேலை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து சுப்பிரமணியன் சொன்னது போல் இராவணன் நாட்டிலும் சீதா நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு. ஆனால் ராமர் நாட்டில் மட்டும் அதிகம். இதற்கு காரணம் நாட்டில் அனைத்து துறைகளையும் தனியார் மையம் ஆக்கியதே என்று சீமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here