தமிழகத்தில் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.., தமிழக அரசின் முடிவு இது தானா??

0
தமிழகத்தில் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.., தமிழக அரசின் முடிவு இது தானா??
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து தமிழக அரசு ஆசிரியர் சங்கங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றும், இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது வரை இதற்கு என்ன முடிவும் கிடைக்காததால் இன்று மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிச்சயம் தமிழக அரசு ஆசிரியர் சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here