கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அனுசரிக்கப்பட்டு பின் ஜூன் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. விருப்பத்தின் பெயரில் பெற்றோர்களின் சம்மதத்தோடு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வங்கக்கடலில் உருவான அடுத்தடுத்த புயல்கள் காரணமாக தமிழகம் மற்றும் புடுசெர்ரியில் மலை வெளுத்து வாங்குகிறது.வங்கக்கடலில் உருவான புயல் இன்னும் நகராமல் நங்க்கூரம் போல் அங்கேயே நகராமல் இருக்கிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. இதேபோல் புதுச்சேரி காரைக்காலில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை தொடரும்!!
இந்நிலையில் கடந்த வாரம் 2,3,4ம் தேதிகளில் காரைக்காலில் பள்ளிகளுக்கு அரசு பொது விடுமுறை அளித்தது. இதனையடுத்து இன்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் திரு. அர்ஜுன் சர்மா. அவர் உத்தரவின் படி ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக புதுசேரியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றாவிட்டால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக அகற்ற கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.