தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் இப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கோடை காலம் நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரை நாள் மட்டும் செயல்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்படும் என அறிவித்துள்ளனர்.