இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டி கொளுத்துகிறது. மக்களை வாட்டி வதைத்து வரும் இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து, தற்காத்துக் கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க, பல்வேறு மாநில அரசும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தி, கோடை விடுமுறை அளித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், தமிழகத்தில் ஏப்ரல் 28ம் தேதியுடன், இறுதி ஆண்டு தேர்வுகள் முடிவடைய உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 30ம் தேதி, கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் என, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த துறை ஊழியர்களுக்கு 9 மணி நேரம் வேலை தான்., வெளியான அதிரடி உத்தரவு!!!
இதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்தி, அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளி திறப்பு குறித்து வெளியிட்டுள்ளது. அதாவது, வழக்கத்தை விட, கூடுதலாக 10 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வரும் ஜூன் 12ம் தேதி 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கும் என ஆந்திர அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.