தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி அமைக்க தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றியது. இதன் மூலம் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என பலரும் கோரிக்கை வைத்ததால் இம்மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் ரயில்வே துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நேரம் முடிந்தாலும் கூடுதலாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் ஓட்டுநர் 14 மணி நேரம் வேலை செய்தும் பணி நீட்டிப்பு செய்ததால் மற்றொரு சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
வாட்ஸ் ஆப் பயனாளர்களே., “லவ் டுடே” பாணியில் வெளிவந்த சூப்பர் அப்டேட்??
இதையடுத்து ரயில் ஓட்டுனர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்குவதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ரயில்வே மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் வரை பணி நீட்டிப்பு செய்யலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.