தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!!!

0
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களை முன்னிட்டு, அம்மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதமான வருகிற டிச. 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்ட்டுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 6ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்களே., பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்றால் அவ்ளோதான்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here