மே 20 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்க உத்தரபிரதேச அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது மாணவர்கள் தங்கள் படிப்பைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் கடுமையான ஊரடங்கு??உயர் நீதிமன்றம் அதிரடி!!
கொரோனா தொற்று அச்சம் காரணமாக சென்ற கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டது . பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோயால் உத்தர பிரதேச அரசு 10 மற்றும் 12 வகுப்பு தேர்வை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்திருந்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இது தொடர்பான முடிவுகள் மாநில அரசால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது.அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,547 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் 281 இறப்புகளும் மாநிலத்தில் பதிவாகியுள்ளன.இந்த நிலையில் உத்தர பிரதேச அரசு மே 20 முதல் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடங்க இருப்பதாக கூறியுள்ளது. மேலும் அம்மாநில அரசு ஆரம்ப வகுப்புகளின் மாணவர்களுக்கு மே 20 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.