தமிழகத்தில் மேலும் கடுமையான ஊரடங்கு??உயர் நீதிமன்றம் அதிரடி!!

0
தமிழகத்தில் மேலும் கடுமையான ஊரடங்கு??உயர் நீதிமன்றம் அதிரடி!!
தமிழகத்தில் மேலும் கடுமையான ஊரடங்கு??உயர் நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இதனை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 24ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்துள்ளது.இதனை தொடர்ந்து.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு:
ஊரடங்கு:

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் கூறியதாவது, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கண்ணியமாக கையாள வேண்டும். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது குறித்து திட்டமிட வேண்டும். மேலும் சென்னை பழைய சட்ட கல்லூரி மற்றும் நீதிமன்ற வளாகத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி கொள்ளலாம் என்றும் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிட வேண்டும் என்றும் ஊரடங்கினால் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here