நான்கு கோடி பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்காக உயர்த்தப்பட்டு, ஆண்டுக்கு 6000 கோடி ரூபாயாக வழங்கும் மத்திய அரசின் திட்டத்தற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உதவித்தொகை
பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. அதில் பட்டியலின மாணவர்களுக்காக வழங்கப்படும் உயர்கல்விக்கான உதவி தொகையினை அதிகரித்து வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாத்தத்தின் முடிவில் இதுவரை வருடத்திற்கு 1100 கோடியாக வழங்கப்பட்டு வந்த கல்வி உதவி தொகை இனிமேல் 6000 கோடியாக வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த திட்டத்தின் மூலமும் ஆண்டுக்கு 59,048 கோடி உயர்கல்விக்கான உதவி தொகையாக வழங்கப்படவிருக்கிறது. இதில் 60% தொகையான ரூ.35,534 கோடி ரூபாயை மத்திய அரசும், மீதி 40% தொகையினை அந்தந்த மாநில அரசுகளும் செலுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.