விருதுநகர் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 6) முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு, பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளனர்.
இந்நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி உண்டு. அதேபோல் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. மேலும் மழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.