தமிழகத்தில் இப்போது அனைத்து பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மழை பெய்யுமா என மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் இப்போது தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 106 டிகிரி செல்சியஸ் வரை சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கரூர், மதுரை, திருச்சி, நாமக்கல், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் வெயில் அதிக அளவு பதிவாக வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் பொதுத் தேர்வு வினாத்தாளை திருத்த புது கட்டுப்பாடு.., தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!