இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரின் விருப்ப நாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் ஒரு சாதாரண குணச்சித்திர நாயகியாகவே சினிமாவில் தோன்றினார். ஆனால் தற்போது இவருக்கு இருக்கும் மவுசுக்கு நிகர் இவர் தான். நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் இவரின் மார்க்கெட் எகிறி கொண்டு தான் சென்றது.
தற்போது அவரை பிரிந்த பின்பும் இவரின் மார்க்கெட் எகிறி கொண்டு தான் உள்ளது. ஹிந்தி தாண்டி ஆங்கில படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா என்பதே அதற்கு ஆதாரம். சினிமாவில் சமந்தாவின் நெருங்கிய தோழி என்றால் அது பாடகி சின்மயி தான். இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்த சின்மயி இனிமேல் பின்னணி குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என நினைக்கிறேன். இனிமேல் எனது நெருங்கிய தோழி சமந்தாவிற்கு பின்னணி குரல் கொடுக்க இயலாது என பதிவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சின்மயிக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமாவில் இருந்து இவர் படிப்படியாக நீங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.