தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதிய பலன்கள் அறிவிக்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் எஸ் சி குருகுலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என சமீப காலமாக போராடி வந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநில சமூக நலத்துறை அமைச்சர் மெருகு நாகார்ஜுனா ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை நேற்று (மே 18) வெளியிட்டுள்ளார். அதன்படி எஸ்சி குருகுலத்தில் பணிபுரியும்,
- சுகாதார மற்றும் செவிலியர் பணியாளர்களுக்கு ரூ.12,900லிருந்து ரூ.19,350 ஆகவும்,
- PET ஆசிரியருக்கு ரூ.10,900லிருந்து ரூ.16,350ஆகவும்,
- TGT ஆசிரியருக்கு ரூ.14,800லிருந்து ரூ.19,350ஆகவும்,
- முதுகலை ஆசிரியருக்கு ரூ.16,100லிருந்து ரூ.24,150 ஆகவும்,
- இளநிலை விரிவுரையாளருக்கு ரூ.18,000லிருந்து ரூ.24,150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு விரைவில் END.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்…, வெளிவந்த அப்டேட்!!
இந்த அறிவிப்பை தொடர்ந்து அமைச்சருக்கு குருகுல ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.