தமிழக அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். இவரது பணிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. இவர் சில காலங்களுக்கு முன்பு மதுரையில் ஐ.ஏ.எஸ் ஆக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சகாயம்:
தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். இவர் பணியில் இருந்த காலங்களில் மிகவும் நேர்மையானவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். மேலும் தனது பணியில் மிகவும் கண்ணியமாக இருந்து வந்தார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2001ம் ஆண்டில் தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ்அதிகாரியாக பதவி ஏற்றார். இவருக்கு தற்போது 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இவர் திடீரென்று தனது 57 வயதில் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்துள்ளார். இவருக்கு பணிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டு காலம் மீதமுள்ளது அதற்கு முன்பு அவர் இந்த முடிவை எடுத்திருய்ப்பது அதிர்ச்சிக்குரியதே. சிலர் இவரை முக்கியமில்லாத பதவியில் தமிழக அரசு பல ஆண்டு காலமாக வைத்திருப்பதால் தான் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறி வருகின்றனர். இவர் இன்னும் 2 மாதங்களில் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இவர் மதுரையில் கலெக்டராக இருந்த காலங்களில் கிரானைட் ஊழலை மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.