அடுத்து வரும் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
10,12ம் வகுப்பு
தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சியிலும் மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மாணவர்களுக்கு மட்டுமில்லாது, பொதுமக்கள், அரசு ஊழியர் பலருக்கும் சாதகமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ந்த வகையில் அடுத்த கல்வி ஆண்டில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வருடம் நடைபெறும் பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பு மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.