கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவர்கள் ஓய்வின்றி வேலை பார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு அளித்து அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன. எனினும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
தலைநகர் டெல்லியை பொறுத்தவரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதுடன், பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறார். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் நிலையில், டெல்லியை விட்டு யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி..!
டெல்லியில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் யாரிடமும் வாடகையை கேட்டு தொல்லை தரவேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், அடுத்த 2,3 மாதங்களுக்கான வாடகையை டெல்லி அரசே கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது தூய்மை தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லி அரசின் e-district இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |