இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது 12 வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி, யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக, கொல்கத்தாவின் வெங்கடேச ஐயர் 57 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். மேலும், ராஜஸ்தான் அணி சார்பாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (98*) மற்றும் சஞ்சு சாம்சன் (48*) அதிரடியாக விளையாடி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐசிசி தரவரிசை: இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்…, நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஆஸ்திரேலியா!!
இந்த போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரைசதம் விளாசியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த, கே எல் ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, கே எல் ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் 14 பந்தில் அரைசதம் அடித்ததே அதிவேக அரைசதமாக இருந்தது. தற்போது, இந்த சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இவரை போல, இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அதன் மூலம், ஐபிஎல் அரங்கில், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை முறியடித்து, முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது, யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 143 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.