ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கும் சம்பந்தம் உள்ளது என தயாரிப்பாளரும் நடிகருமான ரூசோ கூறிய நிலையில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார். அதன் பின் நீண்ட நாட்கள் விசாரணைக்கு பின் ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 21 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நடிகர் ஆர் கே சுரேஷு, ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரூசோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, 3 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஒரு வேலை அவர் சரணடைய வில்லை என்றால் அவரை கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.