தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழனி கோவிலில் தினசரியாக ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதையே பக்தர்களுக்கு பிரதான வழியாக இருந்து வருகிறது. மேலும் பக்தர்கள் மலை கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது. எனவே இந்த ரோப் காரில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.