துருஷில் சௌகான் என்ற சிறுவன் தனது பந்து வீச்சின் மூலம் இந்திய அணியின் கேப்டனையே திணற வைத்துள்ளார்.
துருஷில் சௌகான்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி முடிந்த உடன் இந்திய வீரர்கள் தங்களது ஓய்வறைக்கு சென்று நேரத்தை செலவிட்டு வந்தனர். அப்போது ஓய்வறைக்கு அருகில் இருந்த மைதானத்தில் பல சிறுவர்கள் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை ரோகித் வியப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் 11 வயது துருஷில் சௌகான் என்ற சிறுவன் அபாரமாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ரோகித் சக வீரர்களை அழைத்து அந்த சிறுவனை காண்பித்தார். அந்த சிறுவன் பந்து வீசும் விதம் கிரிக்கெட் வீரர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.
அந்த அளவிற்கு சிறுவன் மிகத் துல்லியமாக பந்தை பேட்ஸ்மேன்களுக்கு வீசினார். நீண்ட நேரமாக இதை கவனித்துக் கொண்டிருந்த ரோகித் அந்த சிறுவனை அழைத்து தனக்கும் பந்து வீச வேண்டும் என கூறினார். அதன்படி அந்த சிறுவன் தனது பந்து வீச்சின் மூலம் ரோகித் ஷர்மாவையே திணற வைத்தார்.
IND vs AUS: தமிழில் பேசி குழப்பமடைய செய்த இந்திய வீரர்கள்…, செய்வது அறியாமல் தவித்த ஆஸ்திரேலியா!!
ஆனால் நீ எப்பொழுது இந்தியாவிற்காக விளையாடுவாய் என கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் கூடிய விரைவில் இந்தியாவிற்கு வரப்போகிறேன். எனவே இந்தியாவிற்காக கண்டிப்பாக விளையாடுவேன் என கூறியுள்ளார் இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.