என்ன மனுஷன் சார் நீங்க.., வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா செய்த காரியம்.., வைரலாகும் வீடியோ!!

0
என்ன மனுஷன் சார் நீங்க.., வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா செய்த காரியம்.., வைரலாகும் வீடியோ!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு ரோஹித் செய்த நிகழ்வு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா VS ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் குவித்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ரோஹித் செய்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது T20 தொடரை வென்றதற்கான கோப்பையை ரோஹித் பெற்றார்.

அதன் பிறகு கோப்பையை வாங்கி கொண்ட ரோஹித் நேராக சென்று தினேஷ் கார்த்திக்கிடம் கொடுத்தார். இந்த நிகழ்வு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனைத்து போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here