உணவு மற்றும் காய்கறி பொருட்களை டெலிவரி செய்ய இனிமேல் ரோபோக்களை பயன்படுத்த அரசு திட்டம் வகுத்துள்ளது.
ரோபோ உணவு டெலிவரி:
கொரோனா ஊரடங்கால் அனைவரும் வெளியே செல்ல அனுமதி இல்லாததால் உணவு, காய்கறி பொருள் டெலிவரி செய்ய ஸ்விக்கி, சோமட்டோ என ஆப்ஸ்களை பயன்படுத்தி வந்தோம். ஆனால், இந்த பழக்கம் நம் வாழ்வில் வழக்கமான பயன்பாடாக நுழைந்துவிட்டது. தற்போது மக்கள் அனைவரும் ஸ்மார்ட் யுகத்தில் பயணிப்பதால் டெலிவரி செய்ய ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மின்சாரத்தில் சார்ஜ் செய்தால் போதும் ஹோட்டலில் சர்வராக, போக்குவரத்தை சீர் செய்ய, கபே ஷாப்பில் என பல வேலைகளில் ரோபோவை பயன்படுத்தி வருகிறோம். பல நாடுகளில் கொரோனா தாக்கம் நீங்கிய நிலையிலும் இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்த பாடில்லை . இதைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தலினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ்., அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கும் திட்டம்!!
அதனால் சமூக இடைவெளியை பின்பற்றி உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ வெள்ளை நிறம், ஒன்றரை அடி உயரம், ஆறு சக்கரத்துடன் பார்சல் பெற்று வீதிகளில் வலம் வருகின்றன. தற்போது இங்கிலாந்து மக்கள் டெலிவரி மட்டுமல்லாமல் ஷாப்பிங்க்கும், இந்த ரோபோ சேவையை பயன்படுத்துகின்றனர்.