தமிழக அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு முறையில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் இடஒதுக்கீடு முறையில் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிப்படிப்பு முக்கியம்..!
பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுவதால் பள்ளியிலும் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |