தமிழகத்திற்கு 2,05,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு – மத்திய அரசு தகவல்!!

0

தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையினை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்து குறித்த விவரத்தினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்தின் தேவையும் கூடுதலாக இருந்து வந்ததால், தற்போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தமிழகம் மற்றும் புதுவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளின் அளவின் விவரத்தினை வெளியிட்டுள்ளார்.

பாரதியார் பல்கலையில் மே 10 முதல் செமஸ்டர் தேர்வுகள் – ஆன்லைனில் நடைபெறும்!!

அதில் தமிழகத்திற்கு 2,05,000 குப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுவைக்கு 11,000 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 16 ஆம் தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவிர் விவரம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனை போலவே பிற மாநிலங்களுக்கும் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனவிற்காக சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுகும் ரெம்டெசிவிர் முறையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மத்திய அரசு ரெம்டெசிவிர் தேவையை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் இதனை முறையாக கண்காணிக்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here