தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நாளை வரை ரெட் அலர்ட் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் அறிவித்த நிலையில், தற்போது நாளை வரை இந்த ரெட் அலர்ட் நீடித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு ஆரம்பித்த கனமழை தற்போது வரை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
கரூரில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு.,, முதல்வர் தொடங்கி வைப்பு.., மட்டற்ற மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு உதவும் விதமாக உதவி எண்களை அறிவித்துள்ளது. அதாவது மழையின் காரணமாக ஏற்படும் மின் கசிவு, மழைநீர் தேங்குதல், மின்வெட்டு போன்ற புகார்களுக்கு 1913, 044-25619206, 044-25619207, 044-25619208 இந்த எண்களை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி டெல்டா மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.