தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கேரளாவில் உள்ள திருச்சூர், பத்தினம் திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக கனமழை விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மலமலவென உயர தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்ததாக வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐயோ.., அந்த கொலையை செஞ்சது நான் தான்.., உண்மையை உடைக்கும் அண்ணி.., நொறுங்கிப்போன அபி!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கேரளாவில் உள்ள திருப்புவனம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற சனிக்கிழமையும் இந்த கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.