தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை முதல் நேற்று வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் கடந்த நாட்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கடைகள் இயங்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த புயல் காரணமாக இன்று விடுமுறை தினத்திலும் நியாய விலை கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.