சுவிட்சர்லாந்தில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி தற்போது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை அளித்துள்ளார்.
உலகம் எங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இவர்கள் மேல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி குற்றவாளிகள் 11 நிமிடங்கள் மட்டுமே அப்பெண்ணை கற்பழித்ததால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் குற்றவாளிகளின் தண்டனையை 51 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் இச்செயலை கண்டித்து சுவிட்சர்லாந்தின் பாசெல் நீதிமன்றத்தின் முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த தீர்ப்புக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்