நடிகர் ரன்வீர் சிங், நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது போலீசார் இவரது வீட்டிற்கு சென்று சம்மன் கொடுத்து, விசாரணை நடத்தி உள்ளனர்.
ஒரு போட்டோல ஆள சாச்சுட்டீங்களே.. குடும்ப குத்துவிளக்காக வந்து நின்ற ஷிவானி – பிளாப் ஆன ரசிகர்கள்!
போலீஸ் விசாரணை:
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், விளம்பர படம் ஒன்றிற்காக அண்மையில் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இந்த போட்டோவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த பல என்ஜிஓ அமைப்புகள் ரன்வீருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து, மும்பை போலீசார் ரன்வீருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக, மும்பை போலீசார் ரன்வீர் சிங் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், அவர் அந்த சமயம் வீட்டில் இல்லை என்றும் படப்பிடிப்பு காரணமாக வெளியூர் சென்று இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால், விசாரணைக்கான சம்மனை கொடுத்துவிட்டு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சொல்லிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் சிலர் ரன்வீருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.