சின்னத்திரை நட்சத்திரமான ரக்ஷிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் சில மனஸ்தாபங்களால் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட இவரது கணவர் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ தான் விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தனக்கு விரும்பும் இல்லை என்பதை ரக்ஷிதா தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக பதிவிட்டு வந்தார்.
இந்த சூழ்நிலையில் ரக்ஷிதா தினேஷை வெறுப்பேற்றும் வகையில் ஒரு செயலை செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதாவது கடந்த வாரம் நீயா? நானா? ஷோவில் விவாகரத்தான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் கணவனை விட்டு பிரிந்து தனியாக வாழும் விவாகரத்தான பெண் ஒருவர் தைரியமாக பேசியிருந்தார். இவரின் பேச்சு இவரை போல விவாகரத்தான பெண்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்திருந்தது. இந்நிலையில் ரக்ஷிதா அவரை நேரில் சந்தித்து அவரது பேச்சுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவ்வாறு தனது கணவரை வெறுப்பேற்றும் வகையில் ரக்ஷிதா செய்திருக்கும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram