நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி பல அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை கையிலெடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாநிலங்களவை தேர்தலை, வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.