சர்வதேச இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்றுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே எல் ராகுல் மற்றும் ஆல் ரவுண்டரான ஜடேஜா 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர்.
இவர்களுக்கு மாற்று வீரர்களாக சர்ஃபராஸ் கான், சவுரப் குமார் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்திய அணியில் விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மற்றொரு சீனியர் வீரரான முகமது ஷமியும் எதிர்வரும் போட்டிக்கான அணியில் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகவே இருக்க கூடும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
15 மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதி இந்த தேர்தல்., இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!!