நடிகர் ரஜினிக்கு “மருத்துவ அவசரம்” என்று தமிழக அரசு இ-பாஸ் வழங்கி உள்ளது, அனைவர் மத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இ-பாஸ் முறை:
கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால், தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமுடக்கம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், மற்ற ஊரில் இருந்து வேறு ஊருக்கு வருவோருக்கு இ-பாஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை கடுமை பின்பற்ற மக்களை அறிவுறுத்தி வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டம் 2020 – விதிகளை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!!
இ-பாஸ் மிகுந்த அவசரமான சூழ்நிலை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு மட்டுமே வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
பரவிய புகைப்படம்:
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினி தனது காரில் பயணம் செய்வது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் அவரது காரில் “மருத்துவ அவசரம்” என்று இ-பாஸ் வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
அவர் தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று வர இ-பாஸ் வாங்கி உள்ளார். தனக்கு மட்டுமே வாங்கி உள்ளார். நன்றாக காரை ஒட்டி செல்லும் ரஜினிக்கு என மருத்துவ அவசரம் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், தமிழக அரசு ஒரவஞ்சனையாக செயல்பட்டு உள்ளது தெரிகிறது. கூடுதலாக நெட்டிஸின்கள் காரை ஒட்டியபோது புகைப்படத்தை யார் எடுத்து இருப்பார் என்றும் கேள்வி எழும்பி உள்ளனர்.