சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த சோகம் – அடுத்தடுத்த சம்பவத்தால் மனம் நொந்து போன ரஜினி!!

0

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் ரஜினி உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் மேலும் சோகத்தை அதிகப்படுத்தி உள்ளதாம்.

மனம் வெறுத்த சூப்பர் ஸ்டார்:

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக உள்ள தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிகள் அண்மையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் விவாகரத்தை அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் ஒரு முக்கிய வேலைக்காக சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது தந்தை ரஜினியிடம் போனில் பேசியதாகவும், ரஜினி அவரை கோபப்பட்டு திட்டி போனை கட் செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

தற்போது, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா பிரிவை எண்ணி சோகத்தில் இருந்த ரஜினி தற்போது ஐஸ்வர்யாவின் உடல் நிலை குறித்தும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here