கடுச்சுப்புட்டா… கத்தக்கூடாதே… கண்களாலே ரசிகர்களை மிரட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை!!!

0

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் ஆலியா மானசா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் விஜய் பட பாடலுக்கு செம அழகாக ரீல்ஸ் செய்துள்ளார்.

விஜய் டிவியின் ராஜ ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் ஆலியா மானசா. இவர் இந்த சீரியலின் முதல் சீசனிலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார். மேலும் அந்த சீரியலில் கிராமத்து வேலைக்கார செம்பா என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடுச்சுப்புட்டா... கத்தக்கூடாதே... கண்களாலே ரசிகர்களை மிரட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை!!!
கடுச்சுப்புட்டா… கத்தக்கூடாதே… கண்களாலே ரசிகர்களை மிரட்டும் ராஜா ராணி சீரியல் நடிகை!!!

தற்போது இவர் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் படித்த பல கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண்ணாக நடித்து வருகிறார். பல்வேறு காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் மக்களின் விருப்ப சீரியலாக TRP ரேட்டிங்கிலும் முதல் 10 இடங்களுக்குள் வந்து உள்ளது. அந்த அளவுக்கு ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒரு சீரியலாகும்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

மேலும் இவர்களுக்கு ஒரு சின்ன பெண் குழந்தையும் உள்ளது. மேலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அம்மாவும் பொன்னும் அடிக்கும் லூட்டிகள் இணையத்தில் வைரலான ஒன்று. மேலும் ஆலியாவும் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த வில்லு படத்தில் இடம்பெற்ற ஏ வாடா மாப்பிள்ளை…வாழப்பழ தோப்புல…வாலிபால் ஆடலாமா.. என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here