விவசாயிகளுக்கு விடியல்.. தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!!

0

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணிரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காவிரி நீரை, மாநிலங்கள் பகிர்ந்து பயன்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. இது தன்னிச்சையான அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை  ஆணையம் பிறப்பித்துள்ளது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணிரையும் காவிரியில் உடனே திறந்து விடவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here