சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு பல அவசர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இப்பொழுது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் நடைமேடை கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு மக்களின் பாதுகாப்பை கருதி தற்போது ரயில் நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கான விளக்கத்தையும் தமிழக அரசு அளித்துள்ளது. அதாவது கட்டணத்தை அதிகரிப்பதனால் மக்கள் அதிகமாக வருவது தவிர்க்கப்படும்.
ஏனெனில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இந்த செய்தி நாளைக்கு சட்டபூர்வமாக அறிவிக்கப்படும். இது மார்ச் 31 வரை நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |