ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….,மருந்துகள் வாங்குவதற்கு சிரமம் இனி இல்லை…,

0
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்....,மருந்துகள் வாங்குவதற்கு சிரமம் இனி இல்லை...,
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்....,மருந்துகள் வாங்குவதற்கு சிரமம் இனி இல்லை...,

மத்திய அரசின் நலத்திட்டங்களில் ஒன்றாக துவங்கப்பட்ட ‘மக்கள் மருந்தகம்’ நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இந்த மக்கள் மருந்தகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், முதற்கட்டமாக சுமார் 50 ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏழைகளுக்கு உதவும் விதமாக, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த திட்டம் மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here