இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, தமிழக அரசு முக்கிய செயல் ஒன்றை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்துள்ளது.
தமிழக அரசின் செயல் :
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக்குறைவு காரணமாக தனது 96 வயதில் அண்மையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராணி மறைவையடுத்து இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று அரசு ஒரு நாள் துக்கம் அனுசரித்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் டெல்லி செங்கோட்டையில் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராணியில் எலிசபெத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகம் உட்பட பல இடங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.