மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை – பெருந்தொற்றை கருத்தில் கொண்டு அரசு உத்தரவு!!

0
34 அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூட உத்தரவு - மாநில கல்வித்துறை திடீர் முடிவு!!

புதுச்சேரி மாநிலத்தில், தொற்று பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் மூடல் :

மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நம் மாநிலத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஜனவரி 10 ஆம் தேதியான நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், அரசின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here