பிரெஞ்சு கோப்பை தொடரில், US பெய்ஸ் டி கேசல் அணிக்கு எதிரான போட்டியில், PSG அணி 7 கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரெஞ்சு கோப்பை:
உலக கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, இரு ஜாம்பவான்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் பிறகு, மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி பிரெஞ்சு கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடரில், US பெய்ஸ் டி கேசல் அணிக்கு எதிராக இன்று PSG அணி மோதியது. இதில், நட்சத்திர வீரர்களான நெய்மர் மற்றும் கைலியன் எம்பாப்பே PSG அணி சார்பாக களமிறங்கி இருந்தனர். பார்வார்ட் வீரர்களான இவர்கள், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கோல் மழை பொழிந்தனர். இதில், கைலியன் எம்பாப்பே 29, 34, 40, 56 மற்றும் 79 ஆகிய நிமிடத்தில் தொடர்ந்து 5 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.
இதற்கிடையில், நெய்மரும் தன் பங்கிற்கு 33 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இவரை தொடர்ந்து, 64 வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோல் அடிக்க, PSG அணியானது ஆட்ட நேர முடிவில் 7 கோல்களை அடித்து அசத்திருந்தது. கடைசி வரை, US பெய்ஸ் டி கேசல் அணி வீரர்கள், PSG அணியின் தாக்குதலை தடுப்பதா? இல்லை கோல் அடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தால், ஒரு கோல் கூட அடிக்காமல் PSG அணியிடம் தோல்வியை தழுவியது.