இந்தியாவில் வாழும் குடிமக்களின் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் அரசு சேகரித்து வருகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடபட்டது.
இப்படி இருக்கையில் கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடியாமல் போகிவிட்டது. ஆனால் இந்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்கும் படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதோடு இப்பணியை மேற்கொள்வதற்காக ரூ. 8,754.23 நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு இணைய வழியில் வரைபடங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்ற தேதியை உள்துறை அமைச்சகம் இப்போது வெளியிடப்படவில்லை.