தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்போது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பொருட்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இவர்களில் மொத்தம் 1.86 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளனர். அதற்கு காரணம் என்னவென்றால் மீதமுள்ள நான்கு லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் சர்க்கரை வாங்குவோரும், அரசு ஊழியர்களாக தான் உள்ளனர். இதனால் இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை என கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு ரூபாய் 2067 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
PKL 2024 : கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிய போட்டி .. பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி!!