ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 5,000 ரூபாய் ரொக்க பணம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!!

0

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அரசுக்கு கோரிக்கை :

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 505 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம், திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன், பல்வேறு பருப்பு வகைகள் மற்றும் மிளகாய் தூள் உள்ளிட்ட 21 வகையான தொகுப்பு பொருட்கள் அடங்கிய பை கொடுக்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்தார். இது ஜனவரி 3ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுப்பு பொருட்களை பெறுவதற்கு, நுகர்வோரின் விரல்ரேகை அவசியம் இல்லை என உணவுத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். எப்போதும் பரிசு தொகுப்புடன், நுகர்வோர்களுக்கு பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரேஷன் பொருட்களோடு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here