நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகமான அளவில் காணப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன்:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் தடுப்பூசி பணிகள், மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நாடு முழுவதும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் தொடர்ந்து பீதி அடைந்து வருகின்றனர். காரணம் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரப்படி நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கொரோனா தொற்று பாதிப்பு தாண்டியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!
அதன்படி முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தற்போது கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தில் நடந்த கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.