கொரோனா நோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்என கருதி ரிசர்வு வாங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சில சலுகை மற்றும் அறிவிப்புகளை அறிவித்திருந்தார்,ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்கும் எளிதில் கடன் கிடைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பாராட்டு
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று.வெளியிட்ட அறிவிப்புகள் சிறுகுறு தொழில் விவசாயிகள் ஏழைகளுக்கு பயனளிக்கும் மிக உதவியாகவும் சிறப்பாக இருக்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார்
பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவு:
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகள், நமது சிறுவணிகர்கள், சிறுகுறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மாநில அரசுகளுக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |