நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதான மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ரூ.6000 என 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்படி 16 வது தவணையை, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து 17வது தவணைக்குரிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் வீட்டில் நடந்த மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
அதாவது PM கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற, விரும்பும் விவசாயிகள் KYC மற்றும் NPCI கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதேபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதும் அவசியம். தவறும் பட்சத்தில், அந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் 17 வது தவணை வரவு வைக்கப்படாது. அப்படி இந்த பணிகள் முடித்தும், பணம் கிடைக்காத பட்சத்தில் 011-24300606, 155261, 18001155266 என்ற எண்ணில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.