தமிழகத்தில் மக்களவை தேர்தல் எதிரொலி.., பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது?? வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மக்களவை தேர்தல் எதிரொலி.., பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது?? வெளியான அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 1 தேதி தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 மையங்களில் விடைத்தாள் திருத்தம் பணி நடைபெற உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தனர். இந்த சூழலில் மக்களவைத் தேர்தல் வேறு ஏப்ரல் 19ஆம் தேதி துவங்க உள்ளது. இதன் காரணமாக பொதுத்தேர்வு முடிவுகள் முன்னதாக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் அதற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here